"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி ஆகும். இதனை ஆங்கிலத்தில் "You can't teach an old dog new tricks" என்பர். அது எந்தளவுக்கு அனுபவ உண்மை சார்ந்த ஒரு பழமொழி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிறு வயதில் திருத்திக் கொள்ளாத கெட்ட பழக்கங்களை, ஐம்பது வயதான பிறகு நிச்சயமாக மாற்றிக்கொள்ள முடியாது. அந்த பழக்கங்கள் இரத்தத்திலேயே ஊறியது போன்று சுடுகாடு போகும் வரை நிலைத்திருக்கும்.
இளமைப் பருவத்தில் மனம் ஒரு மெழுகு போன்றது; அதை எப்படி வளைக்கிறோமோ, அப்படி அமையும். அதன் காரணமாக பெரிய வயதான பிறகு ஒருவரது இயல்பை, குணத்தை, நடத்தையை, பழக்கவழங்கங்களை மாற்றுவது மிகவும் கடினம் ஆகும்.
14 வயதிற்கு முன்னர் பெற்றோர்கள் தமது குழந்தைக்கும் தேவையான Skills களை வளர்த்துக் கொள்வதற்கு தூண்டுதலான விடையங்களை ஆரம்பித்து வைப்பதன் மூலமே அவர்கள் அவற்றில் பிற்காலத்தில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும்.
14 வயதில்(வளரிளம்பருவம் அல்லது டீனேஜ்), ஒரு குழந்தையின் மூளை அளவின் அடிப்படையில் முழு வளர்ச்சியை அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் உள் கட்டமைப்பு மறுசீரமைப்பு(Rewiring) தீவிரமாக நடக்கும் முக்கிய காலகட்டமாகும். இந்த வயதில் மூளையின் அளவு வளர்வது நின்று, அது இயங்கும் விதம் மட்டுமே மேம்படுகிறது. அந்த வயதிற்கு முன்னர் இருந்தே விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற நல்ல விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திருப்புவதன் மூலம் அவர்களின் மூளைத்திறனை நல்வழியில் வளர்க்கலாம்.
உங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரலமாக பேச வேண்டுமா? பாடசாலை கல்வி தவிர்ந்து, ஆங்கிலப்பாடத்திற்கு மாத்திரம் 14 வயது வரையாவது Special Class ஏற்பாடு செய்யவும். அதே போல உங்கள் பிள்ளைகள் சரளமாக பேச விரும்பும் மொழியையும் 14 வயதிற்கு முன்னர் கற்பிக்க ஆரம்பிக்கவும்.
நீச்சல் பயிற்சி, விளையாட்டுகள் சார்ந்த பயிற்சிகளையும் 14 வயதிற்கு முன்னர் ஆரம்பிப்பதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் அந்த விடையங்களில் சிறந்து விளங்குவார்கள்.

Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்