Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


உங்கள் பிள்ளைகளை ஐந்திலேயே வளைய வைப்பது எப்படி?

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி ஆகும். இதனை ஆங்கிலத்தில் "You can't teach an old dog new tricks" என்பர். அது எந்தளவுக்கு அனுபவ உண்மை சார்ந்த ஒரு பழமொழி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

Male Puberty
சிறு வயதில் திருத்திக் கொள்ளாத கெட்ட பழக்கங்களை, ஐம்பது வயதான பிறகு நிச்சயமாக மாற்றிக்கொள்ள முடியாது. அந்த பழக்கங்கள் இரத்தத்திலேயே ஊறியது போன்று சுடுகாடு போகும் வரை நிலைத்திருக்கும்.

இளமைப் பருவத்தில் மனம் ஒரு மெழுகு போன்றது; அதை எப்படி வளைக்கிறோமோ, அப்படி அமையும். அதன் காரணமாக பெரிய வயதான பிறகு ஒருவரது இயல்பை, குணத்தை, நடத்தையை, பழக்கவழங்கங்களை மாற்றுவது மிகவும் கடினம் ஆகும்.

14 வயதிற்கு முன்னர் பெற்றோர்கள் தமது குழந்தைக்கும் தேவையான Skills களை வளர்த்துக் கொள்வதற்கு தூண்டுதலான விடையங்களை ஆரம்பித்து வைப்பதன் மூலமே அவர்கள் அவற்றில் பிற்காலத்தில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கும்.

14 வயதில்(வளரிளம்பருவம் அல்லது டீனேஜ்), ஒரு குழந்தையின் மூளை அளவின் அடிப்படையில் முழு வளர்ச்சியை அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் மற்றும் உள் கட்டமைப்பு மறுசீரமைப்பு(Rewiring) தீவிரமாக நடக்கும் முக்கிய காலகட்டமாகும். இந்த வயதில் மூளையின் அளவு வளர்வது நின்று, அது இயங்கும் விதம் மட்டுமே மேம்படுகிறது. அந்த வயதிற்கு முன்னர் இருந்தே விளையாட்டு, இசை, ஓவியம் போன்ற நல்ல விஷயங்களில் அவர்களின் கவனத்தைத் திருப்புவதன் மூலம் அவர்களின் மூளைத்திறனை நல்வழியில் வளர்க்கலாம்.

உங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரலமாக பேச வேண்டுமா? பாடசாலை கல்வி தவிர்ந்து, ஆங்கிலப்பாடத்திற்கு மாத்திரம் 14 வயது வரையாவது Special Class ஏற்பாடு செய்யவும். அதே போல உங்கள் பிள்ளைகள் சரளமாக பேச விரும்பும் மொழியையும் 14 வயதிற்கு முன்னர் கற்பிக்க ஆரம்பிக்கவும்.

நீச்சல் பயிற்சி, விளையாட்டுகள் சார்ந்த பயிற்சிகளையும் 14 வயதிற்கு முன்னர் ஆரம்பிப்பதன் மூலம் அவர்கள் பிற்காலத்தில் அந்த விடையங்களில் சிறந்து விளங்குவார்கள்.

Comments

Popular posts from this blog

ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?

ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா " இல்லை ". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்( மார்க்க கல்யாணம் ) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள். கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம். ஒரு ஆண் குழந்தை பிறந்த 7 ஆம் நாள் அந்தக் குழந்தைக்கு சுன்னத் செய்து முன் தோலை நீக்க இஸ்லாம் மார்க்கம் பரிந்துரைக்கிறது. ஆனால் அதனை அந்த ஆண் குழந்தையின் 7 ஆவது வயதிற்கு முன்னர்(During the Childhood) செய்தால் போதும் என்ற வழக்கம் நடைமுறையாக உள்ளது. சுன்னத் செய்தால் அதிக சிரத்தை(Care) எடுக்காமல் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது. சுன்னத் செய்த ஆண்களுக்கு விந்து முந்துதல்(சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை) குறைவாக இருக்கும் என்று ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும் அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை....

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களுக்கு அவர்களின் உடலில் காம உணர்வுகள் அதிகரித்து ஆண்குறி விறைப்படையும் போது சிறிதாக தளர்வாக இருக்கும் ஆண்குறி புடைத்தெழுந்து, வீங்கி பெரிதாகும். ஆண்மையுள்ள ஆண்களுக்கு ஆண்குறி எழுச்சி சிறப்பாக இருக்கும். சிலருக்கு புடைத்தெழுந்த ஆண்குறியானது கடப்பாரை போன்று உறுதியாக, தடிமனாக இருக்கும்.  சிந்தனை வேறு பக்கம் திரும்பும் போதும், விந்து வெளியேற்றிய பின்னரும் ஆண்குறி தளர்வடைந்து சுருங்கி சிறிதாகும். இது ஒரு இயல்பான நடவடிக்கையாகும். இதனை முதல் முறை அனுபவிக்கும் போது தேவையில்லாமல் அச்சமடையக் கூடாது. ஆண்கள் தமது ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வேறு யாரும் அவதானிக்காமல் இருக்க ஜட்டி அணிவது அவசியமாகும். ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்...

ஆண்களின் உடலில் ஏற்படும் அதிகப்படியான முடி வளர்ச்சி

ஆண்களின் உடலில் ஏற்படும் மயிர் வளர்ச்சி அச்சப்பட வேண்டிய ஒன்றா? ஆண்களுக்கு உடம்பு முழுவதும் மயிர் வளர்வது, அச்சப்பட வேண்டிய ஒன்று அல்ல. ஆண்களுக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான மயிர் வளர்ச்சி பெரும்பாலும் மரபணுக்கள்(Genetics) மற்றும் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்(Androgens) மற்றும் டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படுகிறது. சில பசங்க, அவங்க உடலில் ஏற்படும் அதிப்படியான முடிவளர்ச்சியை அருவருப்புடன் பார்ப்பது உண்டு. ஆனால் ஒரு ஆணுக்கு உடல் முழுவது முடி வளர்ச்சி ஏற்பட்டால் அதனை பெருமையாகவே பார்க்க வேண்டும். ஆண்களின் உடலில் ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(டெஸ்டோஸ்டிரோன்) சீராக சுரப்பதன் அடையாளமாக, ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியைக் கருதலாம். அவுத்துப் பார்த்தால் அமேசான் காடுதான்! - இவனுக்கு தொடையிலயே இவ்வளவு முடி இருக்கே, அப்போ அந்தரங்கப் பகுதியில் எவ்வளவு அடர்த்தியாக இருக்கும்? ஆண்களின் உடல் முழுவது காடு போல முடி வளர்ச்சி ஏற்பட்டால் அவற்றை Trimmer பயன்படுத்தி Trim செய்து செம்மையாக்கலாம். ஆனால் அவற்றை Shave செய்து அகற்றுவது உகந்தது அல்ல. அதனால் சருமப்பிரச்சனைகள் பிற்காலத்தி...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.