Skip to main content

Posts

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Recent posts

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும். அ

நண்பர்கள் கூட உங்களை தவறாக வழிநடத்தலாம்

ஆண்கள் பூப்படையும் போது அவர்களுக்குள்ளே ஒரு தேடல் ஆரம்பமாகும். இது இயல்பான ஒன்று. தமது உடலில் நிகழும் மாற்றங்கள், உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பானதாக அவை இருக்கும். அநேகமாக தனது வயதை ஒத்த வயதுடைய நண்பர்களிடம் இது பற்றி ஒழிவு மறைவில்லாமல் பேசுவார்கள் அதன் மூலம் ஒருவருக்கு இருக்கும் பாலியல், பூப்படைதல் தொடர்பான அறிவு மற்றவர்களுக்கும் பகிரப்படும். அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்களா? என்பதை முன்னர் சரிபார்க்க முடியாது இருந்தாலும், தற்காலத்தில் இருக்கும் இணையத்தளப் பயன்பாட்டின் ஆதிக்கத்தின் காரணமாக சர்வ சாதாரணமாக Google இல் தேடி, உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள முடியும், அதே நேரம் அவர்கள் உங்களிடம் பகிரும் விடையங்கள் தொடர்பான உண்மைத் தன்மையையும் சரி பார்க்க முடியும். இந்த இரண்டு முறைகளையும் விட இன்னும் சில முறைகளிலும் ஆண்கள்(சிறுவர்கள்) பூப்படைவது தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தனது வீட்டிற்கு அல்லது தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும், அல்லது தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலில்(Hostel) இருக்கும் சீனியர்/யூனியர், வயது வந்த ஆண்களின்(இளைஞர்க

அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது?

அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் வியர்வையை, அகத்துறிஞ்சாது தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணியும் ஆண்களுக்கும், தோய்க்காத/வியர்வையில் ஊறிய ஜட்டிகளை மீண்டும் மீண்டும் அணியும் ஆண்களுக்கும், உடற்பயிற்சி/விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் குளிக்காத ஆண்களுக்கும், குளித்த பின்னர் உடலில் உள்ள ஈரத்தை ஒழுங்காக உலர்த்தாது உள்ளாடைகள் அணியும் ஆண்களுக்கும், ஏற்கனவே Jock Itch இருக்கும் நபரின் ஜட்டி, பனியன், போன்ற உள்ளாடைகளை அணிவதன் மூலமும், அல்லது அவர் பயன்படுத்திய ஆடைகளை தோய்க்காமல் பயன்படுத்துவதன் மூலமும் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். இதனை Jock Itch என ஆங்கிலத்தில் அழைப்பர். சில ஆண்களுக்கு அவர்களின் ஜட்டியைத் துவைக்கப் பாவிக்கும் சவர்க்காரம், அல்லது Detergent Powder சருமத்திற்கு ஒத்துவராததன் காரணமாக, அலர்ஜியாகக் கூட இந்த மாதிரி அரிப்புகள் ஏற்படலாம். திடீரென இவ்வாறான அரிப்பு ஏற்பட்டால், அண்மையில் நீங்கள் பயன்படுத்தும் சவர்க்காரம்/சலவைத்தூளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதையும் அவதானிக்கவும். பொதுக்கழிப்பறைகளை(Public Toilets) அவதானத்துடன் பாவிக்கவும். பொதுக் கழிப