ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.
" ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது " என்பது ஒரு பிரபலமான தமிழ் பழமொழி ஆகும். இதனை ஆங்கிலத்தில் " You can't teach an old dog new tricks " என்பர். அது எந்தளவுக்கு அனுபவ உண்மை சார்ந்த ஒரு பழமொழி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். ஐந்து வயதிலேயே குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு வயதில் திருத்திக் கொள்ளாத கெட்ட பழக்கங்களை, ஐம்பது வயதான பிறகு நிச்சயமாக மாற்றிக்கொள்ள முடியாது. அந்த பழக்கங்கள் இரத்தத்திலேயே ஊறியது போன்று சுடுகாடு போகும் வரை நிலைத்திருக்கும். இளமைப் பருவத்தில் மனம் ஒரு மெழுகு போன்றது; அதை எப்படி வளைக்கிறோமோ, அப்படி அமையும். அதன் காரணமாக பெரிய வயதான பிறகு ஒருவரது இயல்பை, குணத்தை, நடத்தையை, பழக்கவழங்கங்களை மாற்றுவது மிகவும் கடினம் ஆகும்.